Surya
Showing all 4 results
திருமதி ப. நாகேசுவரி திருமாவளவன் (சூர்யா) அவர்கள் பள்ளிப் படிப்பைக் காஞ்சிபுரத்திலும் கல்லூரி நுழைவுப் படிப்பைக் காட்பாடியிலும் முடித்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தொலை தூரக் கல்வியில் மாணவராகச் சேர்ந்து, பி.ஏ. (வரலாறு), எம்.ஏ. (வரலாறு), பி.எட். (கல்வியியல்) போன்ற உயர் பட்டங்களைப் பெற்றார்.
அந்த நிலையிலும், ‘ஏதாவது பணியில் சேரவேண்டும். ஊதியம் திரட்ட வேண்டும்’ என்ற எண்ணமில்லாமல், தன் மூன்று பெண்களும் வாழ்வில் உயர, அவர்களுக்கு துணையாக நல்ல தாயாக, பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக வாழ்ந்தார். வாழ்ந்து வருகிறார்.
எழுபது, எண்பதுகளில் ‘சூர்யா’ என்ற பெயரிலும் ‘நாகேசுவரி’ என்ற பெயரிலும் அவர் வடிவமைத்த ‘நகர்வலம்’, ‘ஊர்க்கவலை’ மற்றும் ‘நான் என்ன செய்யட்டும்’ என்ற வானொலி நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, சென்னை வானொலி நிலையத்தாரின் கவனத்தையும் கவர்ந்தது.